ஜோடியொன்று கர்ப்பிணிப் பெண்ணொருவரிடமிருந்து குழந்தையைத் திருடுவதற்காக அவரை படுகொலை செய்து ஆற்றில் வீசிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அமெரிக்க வட கரோலினா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
8 மாத கர்ப்பிணியான சவன்னா லாபுரொன்டெயின் கிரேவின்ட் (22 வயது) கடந்த 19 ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.
இதனை யடுத்து அவரைத் தேடும் நடவடிக்கை பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டது. மேற்படி தேடும் நடவடிக்கையில் மோப்பநாய்கள் சகி தம் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் சட்ட அமுலாக்க அதிகாரிகளும் பங்கேற்றிருந்த னர்.
இந்நிலையில் சவன்னாவின் சடலம் பிளாஸ் டிக் பையால் சுற்றப்பட்ட நிலையில் அவர் காணாமல் போனதற்கு 8 நாட்கள் கழித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆறொன்றில் மரக்குற்றியொன்றில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து மேற்படி படுகொலையை மேற்கொண்ட சந்தேகத்தில் 32 வயதான வில்லியம் ஹோஹ்ன் மற்றும் 38 வயதான புறூக் குறூவ்ஸ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களது வீட்டிற்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே சவன்னா காணாமல்போயிருந் தார்.
அத்துடன் அந்த ஜோடியின் பராமரிப்பிலிருந்த சவன்னாவினது பச்சிளம் பெண் குழந்தை தொடர்பிலும் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் அந்தக் குழந்தையை தமது குழந்தை என வாதிட்ட புறூக் குறூவ்ஸ் பின்னர் சவன்னா காணாமல்போனதாக கூறப்படும் தினத்திற்கு இரு நாட்கள் கழித்து தமது வீட்டிற்கு வந்து தனது குழந்தையை தம்மிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றிருந்தாக கூறினார்.
அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போது சவன்னாவின் பிறக்காத குழந் தையைத் திருடி அதனை தமது குழந்தையாக உரிமை கோரவே அவரை படுகொலை செய்ததாக புறூக் குறூவ்ஸ் ஒப்புக்கொண் டுள்ளார்.








